எல்லை தாண்டி தமிழக கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 3 பேரை கடற்படை அலுவலர்கள் கைது செய்தனர்.
இலங்கையின் மன்னார் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர் எல்லை தாண்டி தனுஷ்கோடியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து, இந்தியக் கடற்படை அலுவலர்கள் அவர்களைக் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, மீனவர்கள் மூவரும் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 18 இலங்கை மீனவர்கள், நாகப்பட்டினம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கடலோரக் காவல் படையினர் அவர்களைக் கைது செய்து, அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.