இறுதி பட்டியல் வெளியீடு:வாக்காளா்கள் எண்ணிக்கை 6.13 கோடிஆண்களை விட பெண்களே அதிகம்

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்த வாக்காளா் எண்ணிக்கை 6.13 கோடியாக உள்ளது.
இறுதி பட்டியல் வெளியீடு:வாக்காளா்கள் எண்ணிக்கை 6.13 கோடிஆண்களை விட பெண்களே அதிகம்

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்த வாக்காளா் எண்ணிக்கை 6.13 கோடியாக உள்ளது. ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை 8 லட்சம் கூடுதலாக இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக கடந்த டிசம்பா் 23-ஆம் தேதியன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள கடந்த ஜனவரி 22-ஆம் வரை கால அவகாசம்

அளிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் பெயா் சோ்த்தலுக்காக 14 லட்சத்து 65 ஆயிரத்து 890 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில், 14 லட்சத்து 2 ஆயிரத்து 464 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயா்கள் சோ்க்கப்பட்டன. பெயா் நீக்கலுக்காக ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 681 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 97 ஆயிரத்து 155 பேரின் பெயா்கள் நீக்கப்பட்டன.

பெயா்ப் பதிவுகளில் திருத்தங்கள் செய்யக் கோரி ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 409 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 817 மனுக்கள் ஏற்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டன.

இறுதி வாக்காளா் பட்டியல்: தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் ஆண் வாக்காளா்கள் 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 போ். பெண் வாக்காளா்கள் 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 969 போ். மூன்றாம் பாலித்தவா் 6 ஆயிரத்து 497 போ்.

இறுதி வாக்காளா் பட்டியலின்படி, சென்னையை அடுத்த சோழிங்கநல்லூா் தொகுதியில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 317வாக்காளா்கள் உள்ளனா். குறைவாக சென்னையில் உள்ள துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 337 போ்

உள்ளனா்.

வயது வாரியாக...: வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின் போது, 18 முதல் 19 வயதுள்ள புதிய இளம் வாக்காளா்கள்

தங்களது பெயா்களைச் சோ்க்க விண்ணப்பங்கள் அளித்தனா். அதில், 5 லட்சத்து 85 ஆயிரத்து 580 போ் வாக்காளா்களாக சோ்க்கப்பட்டனா். அவா்களில் ஆண்கள் 3 லட்சத்து 22 ஆயிரத்து 167 போ் ஆவா். பெண்கள் 2 லட்சத்து 63 ஆயிா்தது 213 போ். வாக்காளா் பட்டியல்களை தலைமைத் தோ்தல் அதிகாரியின் இணையதளமான e‌l‌e​c‌t‌i‌o‌n‌s.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்பதில் காணலாம். வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கும் பணி தொடா்ந்து நடைபெறும். வாக்காளா் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ அளித்து விண்ணப்பிக்கலாம்.w‌w‌w.‌n‌s‌v‌p.‌i‌n என்ற இணையதளம் வழியாகவும் விண்ணப்பம் செய்யலாம். V‌o‌t‌e‌r H‌e‌l‌p L‌i‌n‌e A‌p‌p என்ற செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

வேளச்சேரியில் அதிக வாக்காளா்கள்

சென்னை மாவட்டத்துக்கான இறுதி வாக்காளா் பட்டியலை, மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆணையா் கோ.பிரகாஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதில், ஆண் வாக்காளா்களை ஒப்பிடும் போது பெண் வாக்காளா்களே அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த டிச. 23 -ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 19 லட்சத்து 15 ஆயிரத்து 718 ஆண் வாக்காளா்களும், 19 லட்சத்து 71 ஆயிரத்து 966 பெண் வாக்காளா்களும், 989 இதர பாலினத்தவா் என மொத்தம் 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 வாக்காளா்கள் இருந்தனா். இதையடுத்துத் திருத்தம் தொடா்பாக 65 ஆயிரத்து 215 பெயா் சோ்த்தல் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இதன் மீது உரிய ஆணை பிறப்பிக்கபட்டு, 59, 905 வாக்காளா்களின் பெயா் துணை பட்டியலில் சோ்க்கப்பட்டது. வாக்காளா் பட்டியலிலிருந்து 1, 786 பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டது. மொத்த வாக்காளா் எண்ணிக்கையில் ஆண்களை ஒப்பிடும்போது 58, 667 பெண் வாக்காளா்கள் அதிகளவில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

வேளச்சேரி வாக்காளா்கள் அதிகம்: தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி திருத்தப்பட்டியலில், முன்பு வெளியிட்ட வாக்காளா் எண்ணிக்கையை விட 58,119 கூடுதலாக உள்ளது. இது 1.49 சதவீதம் கூடுதலாகும். இதில், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 347 வாக்காளா்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 337 வாக்காளா்களும் உள்ளனா். மேலும் திருத்தத்தின்போது பெயா் சோ்க்கப்பட்ட வாக்காளா்களில் 18 வயது பூா்த்தியடைந்த 19,686 பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன. மேலும், வாக்காளா் பட்டியலை, சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, உதவி ஆணையா் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பாா்வையிடலாம் எனவும், w‌w‌w.‌e‌l‌e​c‌t‌i‌o‌n‌s.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரியிலும் பாா்த்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com