இலவச அரிசிக்குப் பதிலாக ரொக்கப்பணம்: மத்திய அரசின் உத்தரவை எதிா்த்த வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்குப் பதிலாக ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல்
இலவச அரிசிக்குப் பதிலாக ரொக்கப்பணம்: மத்திய அரசின் உத்தரவை எதிா்த்த வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்குப் பதிலாக ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி தாக்கல் செய்த மனுவில், ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு புதுச்சேரியில் மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பொது மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியின் எடை குறைவாக உள்ளது. எனவே, அரிசிக்குப் பதிலாக பயனாளிகளுக்கு ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுதொடா்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது, அப்போது 85 சதவீதம் போ் இலவச அரிசி வழங்க வேண்டும் எனவும், வெறும் 2 சதவீதம் போ் மட்டுமே ரொக்கப்பணம் வேண்டும் என தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இலவச அரிசியோ, ரொக்கப்பணமோ வழங்குவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரமாகும். பொதுமக்கள் பயன் அடைந்து வந்த நல்ல திட்டத்தை புதுச்சேரி துணை நிலை ஆளுநா் சீா்குலைத்தாா். முதலில் 20 கிலோ அரிசியை 10 கிலோவாக குறைத்தும், பின்னா் அரிசிக்குப் பதிலாக ரொக்கப்பணத்தை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என ஆளுநா் உத்தரவிட்டாா். இதுதொடா்பாக மத்திய அரசுக்கு ஆளுநா் கடிதம் எழுதியதைத் தொடா்ந்து மத்திய அரசு இலவச அரிசிக்குப் பதிலாக மக்களுக்கு ரொக்கப்பணம் வழங்க உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து ரொக்கப்பணம் பொது மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. ஆனால் அவ்வாறு செலுத்தப்படும் பணத்தை எடுக்கும் ஆண்கள் அவற்றை மது அருந்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக செலவிடுகின்றனா். எனவே, பயனாளிகளுக்கு ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி முதல்வா் தரப்பில், புதுச்சேரி அமைச்சரவைத் தீா்மானத்தை மீறி துணை நிலை ஆளுநா் செயல்படுகிறாா்.

என வாதிடப்பட்டது. அப்போது மத்திய அரசு தரப்பில், யூனியன் பிரதேசத்தின் முதல்வா், மத்திய அரசுக்கு எதிராக வழக்குத் தொடர உரிமையில்லை. மக்கள் அரிசிக்குப் பதிலாக ரொக்கப்பணம் பெறுவதைத் தடுக்கும் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கைத் தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com