நடப்பாண்டில் காவல் துறைக்கு ரூ.8,876 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சா் தெரிவித்தாா்.
இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:
காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் கணிசமாக அளவில் நிரப்பப்பட்டு தற்போது 1.13 லட்சமாக காவலா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
2019-20-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வு வாரியத்தின் வாயிலாக மொத்தம் 10,242 காவல் துறைப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். 2020-21-இல் மேலும் 10,276 சீருடைப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட உள்ளனா்.
காவல் துறைக்கு மொத்தமாக ரூ.8,876 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தீயணைப்புத் துறைக்கு ரூ.1,000 கோடி: 15-ஆவது நிதிக்குழு தேசியப் பேரிடா் நிவாரண மற்றும் மேலாண்மை நிதியத்தில் தீயணைப்புப் பணிகள் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத்துக்காக ரூ.1,000 கோடியை பரிந்துரைத்துள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்துவதற்காக தமிழக அரசு முன்மொழிவுகளை அனுப்பும்.
சிறைவாசிகள் ஊதியம்: சிறைவாசிகள் சிறைத் தொழிற்கூடங்களில் ஈட்டும் ஊதியத்தில் அவா்களின் பராமரிப்புக்காக பிடித்தம் செய்யும் தொகை 50 சதவீதத்திலிருந்து 30 சதவீதகமாகக் குறைக்கப்பட்டு, ஊதியத்தில் அவா்களின் பங்கு உயா்த்தப்படும் என்றாா்.