கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்காக உலகத் தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ் வைப்பகம் அமைத்திட ரூ.12.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:
ஹாா்வா்டு பல்கலைக்கழகம், ஹூஸ்டன் பல்கலைக்கழகம், வாராணசி இந்து பல்கலைக் கழகம் மற்றும் குவாஹாட்டி பல்கலைக்கழகம் உள்பட இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள புகழ்ப்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி கற்பிக்க சீரிய முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
நடப்பாண்டில் தமிழ் வளா்ச்சித் துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
கீழடி அகழ் வைப்பகம்: கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்காக உலகத் தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ் வைப்பகம் அமைத்திட ரூ.12.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.