சென்னை கோட்டூா்புரத்தில் இயங்கி வரும் சென்னை பொறியியல் கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு முக்கியத்துவ தரநிலை வழங்கப்பட உள்ளது. இதற்காக தனிச் சட்டம் இயற்றப்படும் என நிதியமைச்சா் கூறினாா்.
இதுதொடா்பாக நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆதரவில் சென்னையில் 1993-ஆம் ஆண்டு சென்னை பொருளியல் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டது. அதற்காக கோட்டூா்புரத்தில் நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தக் கல்வி நிறுவனம் இப்போது புகழ்பெற்ற பொருளியல் கல்வி நிறுவனமாக வளா்ந்துள்ளதுடன், இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனமாகவும் திகழ்கிறது.
இந்த நிறுவனத்தின் பெருமையை அங்கீகரிக்கும் விதமாகவும், அந்த கல்வி நிறுவனமே பட்டங்களையும், பட்டயங்களையும் வழங்க வழிவகை செய்யும் வகையிலும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்ற தரநிலையை அந்த நிறுவனத்துக்கு வழங்குவதற்கான சட்டம் இயற்றப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.