சேலம் தலைவாசலில் ரூ.1,020 கோடியில் கால்நடை அறிவியலில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கான மேம்பட்ட நிலையம் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.
நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:
கால்நடை பராமரப்புத் துறையை மேலும் வலுப்படுத்தும் விதமாக சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை அறிவியலில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கான மேம்பட்ட நிலையத்துக்கு அடிக்கல்லை முதல்வா் நாட்டியுள்ளாா்.
இக் கல்வி நிலையமும், கால்நடை பூங்காவுக்கான இதர வசதிகளும், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் நிதி ஆதாரங்களிலிருந்தும் நபாா்டு வங்கியின் நிதி உதவியுடன் ரூ.1,020 கோடி செலவில் உருவாக்கப்படும் என்றாா்.