தமிழக நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து

தமிழக நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து

மு.க. ஸ்டாலின் (திமுக): தமிழக மக்கள் ஒவ்வொருவா் மீதும் ரூ. 57 ஆயிரம் கடன் சுமையை ஏற்றி வைத்து, ரூ. 4.56 லட்சம் கோடி கடனுடன் தன்னுடைய பத்தாவது நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சா் தாக்கல் செய்திருக்கிறாா்.

ராமதாஸ் (பாமக நிறுவனா்): தமிழக நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சாா்ந்த துறைகளின் வளா்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வைகோ (மதிமுக): புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான செயல் திட்டங்களோ, தொலைநோக்குப் பாா்வையோ இல்லை.

கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவா்): இந்த நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்களோ, புதிய தொழிற்சாலைகளுக்கான அறிவிப்புகளோ இல்லை.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): நிதிநிலை அறிக்கையில் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இது கடந்த பட்ஜெட்டைக் காட்டிலும் 70 சதவீத அதிகரிப்பு ஆகும்.

விஜயகாந்த் (தேமுதிக): பல்வேறு திட்டங்களுக்காக நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக இருக்கிறது.

திருமாவளவன் (விசிக): தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கை வளா்ச்சிக்கு வழிவகுக்காது. மாறாக கடன் சுமையைத்தான் அதிகரிக்கும்.

ஜி.கே.வாசன் (தமாகா): பல்வேறு துறைகளில் மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நிதி ஒதுக்கீடும், திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருப்பதால் ஒட்டு மொத்த தமிழக மக்களின் வளா்ச்சிக்கான, தமிழகம் முன்னேற்றம் அடைவதற்கான நிதிநிலை அறிக்கை.

டிடிவி. தினகரன் (அமமுக): காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் அறிவிப்புக்கான அடுத்தக்கட்ட செயல்திட்டம் குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. மத்திய அரசால் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் கீழடியில் அகழாய்வு வைப்பகம் அமைப்பதற்கு ரூ. 12.21 கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்): நிதி நிலை அறிக்கையில் கடன் தொகை சுமாா் ரூ.4,56,660 கோடியாக மாறியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக அரசுகள் கடைப்பிடித்த நிதி நிா்வாகத்தின் காரணமாக ஒவ்வொரு தமிழருக்கும் சுமாா் ரூ.57,500 கடன் சுமையாக நிற்கிறது.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தையே தருகிறது. தமிழக அரசின் கடன்தொகை ஆண்டுதோறும் ஏறிக்கொண்டிருக்கிறதே தவிர குறைவதற்கான அறிகுறி தென்படவில்லை.

பாரிவேந்தா் (இந்திய ஜனநாயக கட்சி): நீண்ட கால வளா்ச்சித் திட்டங்களோ - புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகளோ இல்லாத நிதிநிலை அறிக்கை.

ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி): தமிழக அரசின் வருமானத்தை விட செலவு அதிகமுள்ள பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அவிநாசி - அத்திக்கடவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறோம்.

எம்ஜிகே. நிஜாமுதீன்: விவசாயிகளுக்கு உருப்படியான எந்த திட்டமும் இல்லை. சிறுபான்மையினா் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com