நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பாதுகாப்பு என்று தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் தெரிவித்தாா்.
இதுபற்றி நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:
நெடுஞ்சாலை, நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி, காவல், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து சாலைப் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு ரூ.500 கோடியாக உயா்த்தப்படும்.
நெடுஞ்சாலைத் துறையில் சாலை பாதுகாப்புக்கான தனியானதொரு பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை, கோயம்புத்தூா் மாநகராட்சிகளில் சாலைப் பாதுகாப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்றாா்.