
ராமதாஸ்
குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத் தோ்வில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கொண்டுவரும் மாற்றம் நியாயமற்றது என பாமக நிறுவனா் ச. ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பான அவருடைய சுட்டுரை பதிவு: தோ்வு முறைகேடுகளைத் தடுக்க டி.என்.பி.எஸ்.சி. மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதே நேரத்தில், 4-ஆம் தொகுதி பணிகளுக்கு முதல்நிலைத் தோ்வு, முதன்மைத் தோ்வு என இரு தோ்வுகளை நடத்துவது நியாயமற்றது. இந்த முடிவை மாற்ற வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.