ஈரோடு மாவட்டத்தில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது: 105 பவுன் நகைகள் மீட்பு

ஈரோடு மாவட்டத்தில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர், அவர்களிடமிருந்து 105 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது: 105 பவுன் நகைகள் மீட்பு

ஈரோடு மாவட்டத்தில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர், அவர்களிடமிருந்து 105 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் நடந்த திருட்டுக் குற்றவழக்குகளில், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் உத்தரவின்பேரில் ஈரோடு டவுன் டி.எஸ்.பி ராஜு மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையில் எல்.ஐ-கள் சங்கர், சகாதேவன், பாலசுப்பிரமணியம் லோகநாதன், அறிவழகன் ஆகியோர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், ஈரோடு சோலார் பகுதியில் தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சதீஷ் என்கிற வெங்கடேஸ்வரன் (30), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அய்யப்பன் (32) என்பதும், இவர்கள் கோபி பகுதியில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 51 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. அவர்களின் இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் மாமரத்துப்பாளையம் பகுதியில் தங்கியிருந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய தஞ்சாவூரைச் சேர்ந்த முத்துராஜ் (31), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் (28), ராமநாதபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 52 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.  

மேலும் சித்தோடு, ஆப்பக்கூடல் ஆகிய காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டு வழக்கில் தொடர்புடைய சென்னிமலை பகுதியைச் சேர்ந்த பாலாஜி (22) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 22 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

மொத்தம் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து 105 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.31.50 லட்சம் ஆகும். பிடிபட்ட நபர்கள் மீது ராமநாதபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், வேலூர், கோவை போன்ற பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படை போலீஸாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி பரிசளித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளைப் பிடிக்க சிசிடிவி கேமரா முக்கிய ஆதாரமாக இருந்தது. எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com