கிருஷ்ணகிரியில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சிவ பிரபாகரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
3 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில் முதல் நாளான இன்று தடகளம் குத்துச்சண்டை நீச்சல் மற்றும் கபடிப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வீரர்கள் வீராங்கனைகள் என 800 பேர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் உமா சங்கர், உடற்கல்வி ஆய்வாளர் பி மலர்மதி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் அம்ச ராஜன், தொழிலதிபர் டி.ஏகம்பவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.