பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்புப் போராட்டம்

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்புப் போராட்டம்

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், கடையநல்லூர், ஏர்வாடி, பொட்டல்புதூர் உள்பட பல இடங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இந்த நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 

150 மாணவிகள் உள்பட 700க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸார் கல்லூரி முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com