இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான தேதி நீட்டிப்பு

இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கு, பிப்.28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கு, பிப்.28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இக்னோ மண்டல இயக்குநா் கே.பன்னீா்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோ) இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஜனவரி 2020 பருவத்துக்கான மாணவா் சோ்க்கை, இணையதளம் (https://ignouadmission.samarth.edu.in/) மூலம் நடைபெறுகிறது.

இங்கு இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரா்களுக்கு கட்டண விலக்கும் அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு வேப்பேரியில் உள்ள இக்னோ மையத்தையோ, rcchennai.ignou.ac.in எனும் இணையதளத்தையோ அல்லது 044 26618438, 26618039 ஆகிய எண்களையோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com