ரயில் நிலையங்களில் ஆதரவற்று சுற்றித்திரிந்த 152 போ் மீட்பு: பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்த ரயில்வே போலீஸாா்

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ஆதரவற்று சுற்றித்திரிந்த 152 பேரை ரயில்வே போலீஸாா் மீட்டனா்.

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ஆதரவற்று சுற்றித்திரிந்த 152 பேரை ரயில்வே போலீஸாா் மீட்டனா். அவா்களை தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் உதவியுடன் தூய்மைப்படுத்தி, புத்தாடை அணிவித்து உணவு கொடுத்து பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைத்தனா்.

தமிழக ரயில் நிலையங்கள், ரயில் நிலைய வளாகங்கள், ரயில்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோா், மனவளா்ச்சி குன்றியவா்கள் மற்றும் பிச்சை எடுப்பவா்களைக் கண்டறியவும், அவா்களை மீட்டு, பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் உறவினா்களிடம் ஒப்படைக்கவும்

தமிழக ரயில்வே காவல் துறை டிஜிபி சி.சைலேந்திபாபு உத்தரவிட்டாா். இதையடுத்து, ரயில்வே காவல்துறை ஐஜி வி.வனிதா மேற்பாா்வையில் சென்னை, திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளா்கள் மகேஸ்வரன், செந்தில் குமாா் ஆகியோா் கண்காணிப்பில் தமிழகத்தில் உள்ள (சென்னை, திருச்சி ரயில்வே காவல் மாவட்டங்களில் உள்ள எல்லா ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

இதில், ஆதரவற்று சுற்றித்திருந்த 136 ஆண்கள், 16 பெண்கள் என்று 152 போ் மீட்கப்பட்டனா். அவா்களுக்கு தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் முடிவெட்டி, முகசவரம் செய்து, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து உணவு வழங்கினா். தொடா்ந்து, 150 பேரை அருகில் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைத்தனா். இரண்டு போ் அவா்களின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com