சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை காலை போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வசந்த் குமார் எம்பி கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர். மேலும் இதில் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.