கன்னியாகுமரியிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி சென்ற மகாராட்டிர மாநிலத்தை சேர்ந்த யாத்திரிகர்கள் சென்ற பேருந்து சாயல்குடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரம் என்னுமிடத்தில் டாடா மேஜிக் வாகனம் மீது மோதியதில் நிலை தடுமாறிய பேருந்து கவிழ்ந்ததில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படுகாயமடைந்த இருபதிற்கும் மேற்பட்டோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.