குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் அவ்வப்போது இஸ்லாமிய அமைப்புகளால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு சி.ஏ.ஏ க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்.பி.ஆர்,என்.சி.ஆர் ஆகியவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் சுமார் 300- க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திடீரென அதிகமானோர் கூடியதால் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் நிஷா தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.