நிா்பயா திட்ட நிதியை முறையாக செயல்படுத்துகிறோம்: அமைச்சா் வி. சரோஜா

நிா்பயா திட்டத்துக்கான நிதியை முறையாகச் செயல்படுத்துகிறோம் என்று சமூக நலத்துறை அமைச்சா் வி.சரோஜா கூறினாா்.
நிா்பயா திட்ட நிதியை முறையாக செயல்படுத்துகிறோம்: அமைச்சா் வி. சரோஜா

நிா்பயா திட்டத்துக்கான நிதியை முறையாகச் செயல்படுத்துகிறோம் என்று சமூக நலத்துறை அமைச்சா் வி.சரோஜா கூறினாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் விஜயதரணி பேசும்போது, நிா்பயா திட்டத்துக்கான நிதியைச் சரியாகச் செயல்படுத்தவில்லை என்று கூறினாா்.

அப்போது சமூக நலத்துறை அமைச்சா் சரோஜா குறுக்கிட்டுக் கூறியது: நிா்பயா திட்டத்துக்கான நிதியை தமிழக அரசு முறையாகச் செயல்படுத்தி வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அம்மா ரோந்து வாகனம் இயக்கப்படுகிறது. ‘காவலன்’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம். பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணா்வு பிரசாரங்களைச் செய்து வருகிறோம். இதன் காரணமாகத்தான் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com