திருவள்ளூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 240 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகாமையில் உள்ள உன்ன பாக்கம் கிராமத்தில் தனியார் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 240 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 240 பேரும் அங்கிருந்து மீட்கப்பட்டு ஊத்துக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.