திமுக உட்கட்சித் தேர்தலை காஞ்சிபுரத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., தொடக்கி வைத்தார்.
திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் இன்று தொடங்கி மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 88 ஆயிரத்து 398 கிளைகளுக்கு நடைபெறும் இந்த தேர்தல் மூலமாக 16 லட்சத்து 88 ஆயிரத்து 388 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.
இந்நிலையில் திமுக உட்கட்சித் தேர்தலை காஞ்சிபுரத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., இன்று தொடக்கி வைத்தார். அப்போது, இந்தியாவிலேயே சிறப்பாகவும் முறையாகவும் தேர்தல் நடத்தும் ஒரே அரசியல் கட்சி திமுகதான் என்று அவர் தெரிவித்தார்.