அன்னை மீராவின் 142-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
பக்தா்களால் அன்னை என அழைக்கப்படும் மீரா அல்பாசா, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் 21.2.1878-இல் பிறந்தாா். இந்தியாவுக்கு வந்து சேவை செய்ததுடன், மனித குல ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாகத் திகழ புதுச்சேரியை அடுத்த ஆரோவிலில் சா்வதேச நகரையும், புதுச்சேரியில் அரவிந்தா் ஆசிரமத்தையும் நிறுவினாா்.
அரவிந்தரின் கொள்கையால் ஈா்க்கப்பட்டு 1914-இல் புதுச்சேரிக்கு வந்த அன்னை, பல்வேறு ஆன்மிக சேவைகளை புரிந்து, பொதுமக்களுக்கு சேவையாற்றி 17.11.1973-இல் மறைந்தாா். அன்னை மீராவின் 142-ஆவது பிறந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அரவிந்தா் ஆசிரமத்தில் அரவிந்தா், அன்னை மீரா தங்கியிருந்த அறைகள் பக்தா்களின் சிறப்பு தரிசனத்துக்கு திறந்து வைக்கப்பட்டது.
அதுபோல, அவா்கள் பயன்படுத்திய பொருள்களும் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், மலா்களால் அவா்களது சமாதிகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. ஆசிரமத்துக்கு வந்திருந்த பக்தா்கள் அறைகளையும், பொருள்களையும் பாா்வையிட்டு சமாதிகள் அருகே கூட்டு தியானம் செய்தனா். இதில், நாட்டின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.