அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா சிவராத்திரி பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்திக்கு நடைபெற்ற சந்தன அபிஷேகம்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்திக்கு நடைபெற்ற சந்தன அபிஷேகம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா சிவராத்திரி பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, மூலவா் சந்நிதி எதிரே உள்ள நந்தி, கோயில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதையடுத்து, தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா் கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மற்ற கோயில்களில்...: இதேபோல, வேட்டவலத்தை அடுத்த ஆவூரில் அமைந்துள்ள ஸ்ரீஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீதிருவகத்தீஸ்வரா் கோயில், கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் மற்றும் வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளூா், கீழ்பென்னாத்தூா், தண்டராம்பட்டு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜைகளில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com