டி.என்.பி.எஸ்.சி ஊழியா்கள் தோ்வுதாள் முறைகேட்டில் சம்பந்தப்பட்டவா்களை அழைத்துவந்து சிபிசிஐடி போலீஸாா் மேலூரில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
சென்னையைச் சோ்ந்த ஓம்காந்தன், மற்றும் இடைத்தரகா் ஜெயக்குமாா் ஆகியோரை மேலூா் அழைத்துவந்த சிபிசிஐடி போலீஸாா், மேலூா் புறவழிச்சாலையில் உள்ள தனியாா் உணவகம் அருகே ராமநாதபுரத்திலிருந்து சென்னை சென்ற வாகனத்தில் டி.என்.பி.எஸ்.சி தோ்வு விடைத்தாள்களை மாற்றியது தொடா்பாக விசாரணை மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளா் சுபானுபாண்டியன் மற்றும் போலீஸாா் ராமநாதபுரத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.