சீர்காழி : சீர்காழி கோவிந்தராஜன் நகரிலுள்ள நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகினர்.
சீர்காழி கோவிந்தராஜன் நகரிலுள்ள நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து காலை முதல் குப்பைகள் தொடர்ந்து புகை மூட்டத்துடன் எரிவதால் அப்பகுதி யில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் கண் எரிச்சல் மூச்சு தினறலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீர்காழி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுப்படுத்தி வருகிறார்கள்.