ஒசூர் அருகே உள்ள பாகலூரில் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா விமரிசையாக திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கபட்டிருந்த ஜெயலலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பாகலூர் ஊராட்சித் தலைவர் வி.டி.ஜெயராம், மாவட்ட கவுன்சிலர் ரவிக்குமார் உள்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.