சாத்தூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 72ஆவது பிறந்த நாள் விழாவில், எம்எல்ஏ கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சாத்தூரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 72ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சாத்தூர் நகர் கழகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
மேலும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.
இதேபோன்று சாத்தூர் தொகுதி முழுவதும் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள். இதில் அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.