பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் நடத்த கொள்ளைச் சம்பவத்தில் பல லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம்-தாராபுரம் சாலை கள்ளிப்பாளையத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
வங்கி கட்டிடத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு பல லட்சம் மதிப்பிலான நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி திஷா மிட்டல், பல்லடம் டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் காமநாயக்கன்பாளையம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.