தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் (பிப்.25, 26) வறண்ட வானிலை நிலவும். வெப்பநிலையும் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை, சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பகலில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றாா் அவா்.