புதுக்கோட்டையிலும் தொடர் போராட்டத்தில் அமர்ந்த இஸ்லாமியர்கள்

 குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி  புதுக்கோட்டையிலும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் அமர்ந்தனர்.
இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்
இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்

புதுக்கோட்டை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி  புதுக்கோட்டையிலும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் அமர்ந்தனர்.

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் புதுக்கோட்டையிலும் உரிமை மீட்புக் குழு சார்பில் தொடர் தர்ணா போராட்டத்தை புதன்கிழமை மாலை இஸ்லாமியர்கள் தொடங்கினர்.

புதுக்கோட்டை கலீப்நகர் 4ஆம் வீதியில் தொடங்கப்பட்டுள்ள இந்த தர்ணா போராட்டம் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com