சென்னை: சபாஷ் நண்பா..அப்படி வாங்க! என்று மத்திய அரசைக் கண்டித்து நடிகர் ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் வாயிலில் பத்திரிகையாளர்ளை புதன் மாலை நடிகர் ரஜினி சந்தித்தார். அப்போது தில்லி வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷங்கள் தொடர்பான பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தில்லி வன்முறைச் சம்பவங்கள் என்பது மத்திய உளவுத்துறையின் தோல்வி. இதற்காக மத்திய அரசை நான் கண்டிக்கிறேன். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை தந்திருந்த சமயத்தில் இத்தகைய வன்முறை சம்பவங்கள் நடந்திருப்பது தெளிவாக உளவுத்துறையின் தோல்விதான். இந்தப் போராட்டங்களை ஆரம்பத்திலேயே அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும் என்று பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சபாஷ் நண்பா..அப்படி வாங்க! என்று மத்திய அரசைக் கண்டித்து நடிகர் ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சபாஷ் நண்பர்
@rajinikanth
அவர்களே, அப்படி வாங்க.
இந்த வழி நல்ல வழி.
தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை.
வருக, வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.