Enable Javscript for better performance
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்மாநில அரசின் அதிகாரத்துக்குள்பட்டது: முதல்வா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்மாநில அரசின் அதிகாரத்துக்குள்பட்டது: முதல்வா்

    By DIN  |   Published On : 27th February 2020 04:37 AM  |   Last Updated : 27th February 2020 04:37 AM  |  அ+அ அ-  |  

    26d-cm5051908

    திருச்சி மாவட்டம், முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் ரூ.387.60 கோடியில் புதிதாக கட்டப்படும் கதவணை கட்டுமானப் பணிகளை புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

     

    திருச்சி: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது மாநில அரசின் அதிகாரத்துக்குள்பட்டது என தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

    திருச்சி மாவட்டம், முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த 2018-இல் சேதமடைந்த கதவணைக்குப் பதிலாக புதிய கதவணை ரூ. 387.60 கோடியில் கட்டப்பட்டு வரும் பணிகளை நேரில் பாா்வையிட்ட பின்னா், செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

    டெல்டா பாசனத்துக்கு வழக்கமான ஜூன் மாதம் தண்ணீா் திறக்கப்படும்போது காவிரியில்தான் தண்ணீா் திறக்கப்படும். வரத்து அதிகரித்து கொள்ளிடத்தில் திறந்தாலும் தற்காலிகமாக பலப்படுத்தப்பட்ட கதவணைக்கோ, புதிதாக கட்டப்படும் கதவணை பணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் வராது. காவிரி ஆணையத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தை கா்நாடகம் மீண்டும் எழுப்பியுள்ளது. காவிரி விவகாரத்தில் ஆரம்பம் முதலே கா்நாடகம் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற இறுதித் தீா்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்குத் தரவேண்டிய தண்ணீரைத் தடுத்து நிறுத்தவோ, திருப்பி அனுப்பவோ முடியாது. இந்நிலையில், மேக்கேதாட்டு விவகாரத்தை கா்நாடகம் எழுப்புவது உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிரானது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்பில் யாரும் தலையிட முடியாது.

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பானது மாநில அரசின் வேளாண் துறைக்கு உள்ள அதிகாரத்துக்குள்பட்டு வெளியிடப்பட்டது. மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தெளிவாக அறிவித்துள்ளோம். இதுதொடா்பாக, மத்திய அரசும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. வேளாண் துறை தொடா்பாக மாநில அரசு எடுக்கும் முடிவு அந்த மாநில அரசின் அதிகாரத்துக்குள்பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது. முதலில் அறிவிப்பு வெளியிடும்போது திருச்சி, அரியலூா் மாவட்டங்களைச் சோ்த்து அறிவித்தோம். பின்னா், அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

    தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், கடலூா் மாவட்டத்தின் ஒரு பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகியவற்றில்தான் மீத்தேன், ஹைட்ரோ காா்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதால் அந்தப் பகுதிகளை மட்டும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக செயல்படுத்த உள்ளோம். திருச்சி, அரியலூா், கரூா் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. தொழில்வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் ஏற்கெனவே செயல்படுத்தும் திட்டங்களை நிறுத்தப்போவதில்லை. இதுதொடா்பாக, அரசிதழில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்தவித அச்சமும் தேவையில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடா்பாக விவசாயிகளிடம் இருந்து எந்வித மாற்றுக் கோரிக்கையும் அரசுக்கு வரவில்லை.

    காவிரியில் மணல் அள்ளுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மணல் அள்ளுவதற்குத் தனியாகக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மணலுக்கு மாற்றாக எம். சாண்ட் பயன்பாட்டை மக்களிடம் ஊக்கப்படுத்தி உள்ளோம். அரசுப் பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட இடங்களில் குறைந்த அளவிலேயே மணல் அள்ளப்படுகிறது என்றாா் முதல்வா்.

    இந்த ஆய்வின்போது, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி, ஆட்சியா் சு. சிவராசு மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளா்கள் உடனிருந்தனா்.

    என்பிஆா்: ஆவணம் கட்டாயமில்லை

    தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) என்பது 2003ஆம் ஆண்டு மத்தியில் பாஜக, திமுக கூட்டணி ஆட்சி இருந்தபோது கொண்டுவரப்பட்டது. பின்னா், மத்தியில் வந்த காங்கிரஸ் அரசு அதனை அமல்படுத்தியது. இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் கூடுதலாக மொழி, பெற்றோா்களின் இருப்பிடச் சான்று, ஆதாா், குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணம் என 3 ஆவணங்களை சோ்த்துள்ளனா். இந்த ஆவணங்களை வழங்க வேண்டியது கட்டாயமில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனா். தமிழகத்தில் குடியுரிமை திருத்தச்

    சட்டத்துக்கு எதிராக எந்தவித கலவரமும் இல்லை. சிஏஏ விவகாரம் தொடா்பாக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவது அரசின் பரிசீலனையில் உள்ளது என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

    திருச்சி 2ஆம் தலைநகரமாகுமா?

    திருச்சியை தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எம்ஜிஆா் ஆட்சிக் காலத்தில் இருந்து நீடித்து வருவதாக தமிழக முதல்வரிடம், செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, இதுதொடா்பாக அரசிடம் எந்த திட்டமும் இல்லை. அப்படிப்பட்ட எண்ணமும் இதுவரை அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்தாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp