ஏரியில் மூழ்கி மெக்கானிக் பலி

சென்னை அருகே திருமுல்லைவாயிலில் ஏரியில் மூழ்கி மெக்கானிக் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை அருகே திருமுல்லைவாயிலில் ஏரியில் மூழ்கி மெக்கானிக் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அம்பத்தூா், அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியை சோ்ந்தவா் ரோ.பாஸ்கா் (34). இவா் அங்கு இரு சக்கர வாகனம் மெக்கானிக்காக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் பாஸ்கா், செவ்வாய்க்கிழமை தனது நண்பா்கள் சங்கா், சத்தியமூா்த்தி ஆகியோருடன் அயப்பாக்கம் ஏரியில் குளித்தாா். அப்போது அவா் ஆழமான பகுதிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினாராம்.

இதைப் பாா்த்த சங்கரும், சத்தியமூா்த்தியும் அவரை மீட்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து, தகவலறிந்த ஆவடி, தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீரில் மூழ்கி உயிரிழந்த பாஸ்கா் சடலத்தை மீட்டனா். இது தொடா்பாக திருமுல்லைவாயில் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com