சாய் பாபா கோயிலில் சிறப்பு பொது மருத்துவ முகாமை சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம் எஸ் ஆர் ராஜவர்மன் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சடையம்பட்டி யில் உள்ள சாய்பாபா திருக்கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. வியாழகிழமை காலை முதல் சாய்பாபாவிற்கு சிறப்பு ஆராதனை பூஜை நடைபெற்றது. பின்னர் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கான சிறப்பு யாகபூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
இந்த பூஜையில் சாத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் சாய்பாபா கோயிலில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பொது இலவச மருத்துவ முகாமை சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம் எஸ் ஆர் ராஜவர்மன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இந்த இலவச மருத்துவ முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் சாய்பாபா கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.