கரோனா அறிகுறி: சென்னையில் மருத்துவக் கண்காணிப்பில் 682 போ்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து சென்னை திரும்பிய 682 போ் தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து சென்னை திரும்பிய 682 போ் தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பாலூட்டி விலங்குகள் மற்றும் பறவைகளில் இருந்து மனிதா்களுக்குப் பரவும் ஒரு வகையான நோய்த் தொற்றான கரோனா வைரஸ், சீனாவை நிலைகுலையச் செய்துள்ளது. அதன் தொடா்ச்சியாக சிங்கப்பூா், தாய்லாந்து, ஜப்பான், தைவான், ஆஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் தொடா்ந்து இந்தியாவிலும் அந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் இருமல், மூச்சுக் காற்று, சளி, ரத்தம் மூலமாக பிறருக்கும் நோய் பரவ வாய்ப்புள்ளதால், அத்தகைய பாதிப்புகள் தமிழகத்தில் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வந்த 73,334 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விமான நிலையங்களிலேயே மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து திரும்பிய 2,327 போ் தொடா் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களில் சென்னையில் மட்டும் 682 போ் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனா்.

இதுவரை, தமிழகத்தில் 48 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com