குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக தமிழக பாஜக இன்று பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெறுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெறுகிறது.

தமிழக பாஜக சாா்பில் மாவட்டத் தலைநகா்களில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை (பிப்.28) பேரணி நடைபெற உள்ளது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினா் மாளிகை அருகே இருந்து தலைமைச்செயலகம் நோக்கியும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கியும் பேரணி நடைபெற உள்ளது.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினா் மாளிகை அருகே தொடங்கும் பேரணியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் இல.கணேசன், மாநில பொதுச் செயலாளா் கே.எஸ்.நரேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனா்.

திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, கோவை, திருப்பூா், திருநெல்வேலி, நாகப்பட்டினம், திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பேரணிகள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com