ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் ரூ. 2.38 லட்சத்தைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சனிக்கிழமை திடீரென அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கணக்கில் வராத ரூ. 2.38 லட்சம் ரொக்கம் சிக்கியது. இதையடுத்து ரூ. 2.38 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், சோதனைச் சாவடி ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.