தஞ்சாவூர்: குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் முஸ்லிம்கள் தர்னா போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாநகரக் கிளைத் தலைவர் சையது முஸ்தபா தலைமை வகித்தார்.
இதில், கையில் தேசியக் கொடியை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். செயலர்கள் யாசர் அராபாத், பிலால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல வல்லத்தில் தஞ்சாவூர் - திருச்சி சாலை, ஜும்மா மசூதி எதிரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தர்னா போராட்டம் நடைபெற்றது. இதில் கிளைச் செயலர் ஜாபர் அலி தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.