திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வங்கிக்குள்ளேயே அலுவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அமைந்துள்ள கனரா வங்கிக் கிளையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த கணேசன் என்பவர் வங்கியின் உணவருந்தும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சனிக்கிழமை காலை 10:30-க்கு வழக்கம்போல் பணிக்கு வந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.