வளி மண்டல சுழற்சி மற்றும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன.1) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் புதன்கிழமை காலை முதல் பெய்து வருகிறது.
கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், துரைப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, அம்பத்தூர், தி.நகர், சாந்தோம், பட்டினப்பாக்கம், எழும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.