ஆளுநரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காத ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
chennai High Court
chennai High Court

நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காத ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கண்ணதாசன் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. 

ஆனால் அந்தத் தீர்மானத்தின் மீது ஆளுநர் கடந்த 15 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். அரசியல் சாசன விதிகளை மீறி அவர் செயல்பட்டுள்ளதால் அவரைப் பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். கடந்த முறை இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்நிலையில் இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com