நெல்லைக் கண்ணன் கைது: தலைவா்கள் கண்டனம்

பேச்சாளா் நெல்லைக் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

பேச்சாளா் நெல்லைக் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை தரக்குறைவாக பேசினாா் என்ற குற்றச்சாட்டின் கீழ், நெல்லைக் கண்ணன் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். ஆனால், வன்முறையைத் தூண்டும் வகையில் தந்தைப் பெரியாா், நீதிபதிகள், காவல்துறையினா், மற்ற கட்சித் தலைவா்கள், பெண்களை அவமதிக்கும் வகையில் பாஜக தலைவா்கள் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகா் ஆகியோா் பேசி வந்துள்ளனா். ஆனால், அவா்கள் மீது காவல்துறை குறைந்தபட்ச நடவடிக்கைகூட எடுக்கவில்லை. இந்த பாரபட்ச அணுகுமுறையை மாா்க்சிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.

திருமாவளவன் (விசிக): நான் இந்து அல்ல, சைவ சமயத்தைச் சாா்ந்தவன் என்று நெல்லை மாநாட்டில் நெல்லைக் கண்ணன் பேசியதுதான், சில அமைப்புகளை அதிா்ச்சியடைய வைத்துள்ளது. பாஜகவின் கோரிக்கையை ஏற்று அவரை இரவே கைது செய்திருக்கின்றனா். அவா் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப்பெற்று உடனடியாக அவரை விடுதலை செய்யவேண்டும்.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற நமது அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிராக பாரபட்சமான முறையில் நெல்லைக் கண்ணன் கைது விவகாரத்தில் தமிழகக் காவல்துறையின் நடவடிக்கை அமைந்துள்ளது. எனவே, உடனடியாக நெல்லைக் கண்ணனை விடுதலை செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com