சென்னை: குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பான விவகாரத்தில், தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் மனு அளித்தோம்.
நாங்கள் கொடுத்த நோட்டீஸ் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது. எங்களது கோரிக்கை குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுப்பதால் வெளிநடப்பு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.