குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜகவினர் பேரணி மேற்கொண்டுள்ளனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று விளக்கும் பிரசாரத்தை பாஜக தேசியத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து பாஜகவினர் பல்வேறு பகுதிகளில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக தரப்பில் இன்று பேரணி நடைபெற்று வருகிறது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.