கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தருமபுரி மாவட்டம் மாட்லாம்பட்டியில் உள்ள சக்தி கைலாஸ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு 3 நாள் கல்வெட்டுப் பயிற்சி நடைபெற்றது.
ஜனவரி 9ஆம் தேதி(வியாழக்கிழமை) தொடங்கிய இந்தப் பயிற்சியில் பழங்கால எழுத்துக்கள், கோவில் கட்டிடக் கலைகள், கல்வெட்டுகள், கல்வெட்டுகளை படி எடுத்தல் உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் கோவிந்தராஜ் மாணவிகளுக்கு இந்தப் பயிற்சி அளித்தார். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.