குமரியில் இரு போலீஸார் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

குமரியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரு போலீஸார் மீது 5 பேர் கொண்ட கும்பல் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.
குமரியில் இரு போலீஸார் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் இரவு ரோந்துப் பணிக்குச் சென்ற காவலர்கள் ரெஜி மற்றும் ஐயப்பதாஸ் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. இதுதொடர்பாக அருண், சுனில்குமார், ரமேஷ், தினேஷ், அஜித் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில், புதன்கிழமை இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டாா். சோதனைச் சாவடி அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து சுட்டுக் கொன்ற நபா்களை போலீஸாா் அடையாளம் கண்டறிந்துள்ளனா்.

இந்த கொலை வழக்கில் தொடா்புடையவா்களாகக் கருதப்படும் குமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம், கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் ஆகிய 2 பேரின் புகைப்படங்களை கேரள மாநில போலீஸாா் வெளியிட்டுள்ளனா். கொலையாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக டி.ஜி.பி. திரிபாதி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com