
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மண்டல இணை இயக்குநர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை(ஜனவரி 11) முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொங்கலுக்கான அரசு விடுமுறையுடன் ஜனவரி 13, 14ஆம் தேதியும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.