தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக 3 ஒன்றியங்களில், காங்கிரஸ் கட்சி 3 ஒன்றியங்களில், பாஜக 2 ஒன்றியங்களில், திமுக ஒரே ஒரு ஒன்றியத்திலும் தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளன.
ஒன்றியம் மற்றும் வெற்றி பெற்றவர்கள் விபரம்
(1). தோவாளை ஒன்றியம் -சாந்தினி (அதிமுக).
(2) அகஸ்திஸ்வரம் ஒன்றியம் - அழகேசன் (அதிமுக)
(3) ராஜாக்கமங்கலம் ஒன்றியம் - அய்யப்பன் (அதிமுக)
(4) மேல்புறம் ஒன்றியம் - ஞான சவுந்தரி (காங்கிரஸ்)
(5) தக்கலை ஒன்றியம் - அருள் ஆன்றன்(காங்கிரஸ்)
(6) கிள்ளியூர் ஒன்றியம் -ரமணிபாய் (காங்கிரஸ்)
(7) குருந்தன்கோடு - அனுஷா தேவி (பா.ஜக)
(8) முன்சிரை - ராஜேஸ்வரி (பாஜக)
(9) திருவட்டாறு - ஜெகநாதன்(திமுக)