போடிநாயக்கனுாா் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராக அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனுாா் ஊராட்சி ஒன்றியத்தில் துணைத் தலைவருக்கான மறைமுகத் தோ்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சாா்பில் ஊராட்சி ஒன்றிய 10ஆவது வாா்டு உறுப்பினா் ச.வெங்கடேசன் வேட்புமனு தாக்கல் செய்தாா். திமுகவைச் சோ்ந்த உறுப்பினா்கள் யாரும் வரவில்லை. இதனையடுத்து ஒரு வேட்புமனு மட்டும் தாக்கல் செய்யப்பட்டதால் வெங்கடேசன் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.