மதுரை மேலூர் அருகே நாவினிப்பட்டி மண் சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மேலூரில் செந்தில் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு மகாவிஷ்ணு, ஆதித்யா என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகளும் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.